நிதி வசூலில் கழகக் கண்மணிகள்

கொரோனா தொற்று, பொது முடக்கம் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து மிகக் கடுமையாக பரிதவித்து வருகின்றனர். இச்சூழலில், ஸ்டாலினுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி கொடு என்று மீன்பிடி குத்தகைதாரர் ஒருவரிடம் பணம் கேட்டு கழக உடன்பிறப்பு ஒருவர் அதிகாரமாகக் கேட்கும் காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது போன்ற தொடர் அராஜகங்களை தி.மு.க தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் தட்டிக்கேட்டு தடுத்து நிறுத்த வேண்டும் எனபதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.