பாகிஸ்தானியர்கள் பெற்ற குடியுரிமை

குஜராத் அகமதாபாத்தின் குபர்நகர் பகுதியில் வசித்து வந்த மகேஷ் பார்பியானி, சுரேஷ் பர்பியானி மற்றும் ஹரேஷ் பர்பியானி. என்ற 3 பாகிஸ்தானியர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாரதக் குடியுரிமை பெற்றனர். நரோடா தொகுதியில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களையும் பதிவு செய்துள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு வந்த புகாரையடுத்து விசாரிக்கப்பட்டதில் இவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மேகனி நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.