கிறிஸ்தவ மதபோதகர் கைது

திருப்பூரில் உள்ள வீரபாண்டியைச் சேர்ந்தவர் சாமுவேல் என்ற கிறிஸ்தவ மதபோதகர், அதே பகுதியில் ‘சர்ச்’ ஒன்றை நடத்தி வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் அங்கு பிரார்த்தனைக்கு வந்த 16 வயது சிறுமி ஒருவரிடம், பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துள்ளார் மதபோதகர் சாமுவேல். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் அவர்மீது ‘போக்சோ’ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். அப்போது சாமுவேலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை கைது செய்வதில் தாமதம் ஆனது. இதனால், தற்போது அவரை கைது செய்த காவல்துரையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.