சென்னை லிட் பெஸ்ட்

சென்னை, தியாகராய நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில், ‘இந்தியா அனாலிடிக்ஸ்’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ‘சென்னை லிட் பெஸ்ட்’ என்ற இலக்கிய நிகழ்ச்சி கடந்த மார்ச் 26, 27, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இதில், தமிழ், ஆங்கிலத்தில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள், அமர்வுகள் நடைபெற்றன. ‘எண்னங்களும் வண்ணங்களும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நல்லி குப்புசாமி, எழுத்தாளர் சிவசங்கரி, வா வே சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டு துவக்கிவைத்தனர்.