அறநிலையத்துறை ஒத்துழைப்பு அவசியம்

ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கிருஷ்ணகிரி பையூர் வீர ஆஞ்சநேய சுவாமி மற்றும் கோதண்டராம சுவாமி கோயில்கள், நாகமங்கலம் அனுமந்தராய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் சொத்துகள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டும் விற்கப்பட்டும் உள்ளன. இதற்கு, அறநிலையத் துறை அதிகாரிகளும் உடந்தை. பத்திரப்பதிவுத் துறை கேட்டும், இதுவரை கோயில் நிலங்களின் விவரங்களை அறநிலையத்துறை வழங்கவில்லை. கோயில்களின் நிலங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, கோயில் சொத்துகளின் விவரங்களை வருவாய்துறை, பத்திரப்பதிவுத்துறை கோரினால் அதை வழங்குவதற்கு ஹிந்து அறநிலையத்துறைக்கு ஏன் தயக்கம்? அறநிலையத்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆக்கிரமிப்புகளை மீட்க முடியாது. அறநிலையத்துறை ஆணையர் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.