பரூக் அப்துல்லா மீது குற்றப்பத்திரிகை

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தவறாக பயன்படுத்தியதுடன் முறைகேடாக சில நியமனங்களை செய்ததாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது. பரூக் அப்துல்லாவிடம் இது தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கனவே பல முறை விசாரணை நடத்தியுள்ளது. கடைசியாக கடந்த மே 31ம் தேதி, பரூக் அப்துல்லாவிடம், ஸ்ரீநகரில் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து அவர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில், பரூக் அப்துல்லாவின் ரூ.11.86 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது நினைவு கூரத்தக்கது.