சிறுபான்மையினர் ஆணையத் தலைவர்

சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக எஸ் இக்பால் சிங் லால்புரா பொறுப்பேற்றுக் கொண்டார். சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக இதற்கு முன் அவர் இருந்த போது, சிறுபான்மையினரின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதையும், அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களின் பலன்களை அவர்கள் பெறுவதையும் உறுதிசெய்யும் நோக்குடன் அனைத்து சிறுபான்மையினரின் நலனுக்காகவும் அவர் அயராது உழைத்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.