சேற்றில் மலரும் செந்தாமரை

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றுகையில், “மாநிலங்களவையில் பல மூத்த உறுப்பினர்கள் இந்த சபைக்கு வழிகாட்டியுள்ளனர். இங்கு நடக்கும் விஷயங்களை நாடு மிகவும் ஆர்வத்தோடு உற்று நோக்குகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த அவையில் சிலருடைய குரல், இந்த நாட்டிற்கும், இந்த சபைக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. எதிர்கட்சியினருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு தான் சேற்றை வாரி இறைத்தாலும், சேற்றில் தான் தாமரை மலரும். பா.ஜ.க அரசு செயல்பட கூடிய அரசு என மக்கள் நம்புகிறார்கள்” என்று கூறினார்.