கோயில் நிலம் மீட்க வழக்கு

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை கிராமத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பக்தவத்சல பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு விஜயரகுநாத அரசர் 400 ஏக்கர் நிலங்களை தானமாக கொடுத்துள்ளார். இந்த நிலம், அதன் புனரமைப்பு உள்ளிட்ட விவரங்கள் கொண்ட தாமிர பட்டயம் தற்போது கோயிலில் இல்லை. ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்துக்குகொண்டு செல்லப்பட்ட அது இதுவரை திருப்பி தரப்படவில்லை. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்; 400 ஏக்கர் நிலத்தில் 7 ஏக்கர் நிலம்தான் கோயில் வசம் உள்ளது. மற்றவை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதற்கான குத்தகையோ வாடகையோ வசூலிக்கப்படவில்லை. அவற்றின் மதிப்பு 5,000 கோடி. எனவே தாமிர பட்டயத்தையும் 400 ஏக்கர் நிலங்களையும் மீட்க தமிழக அரசுக்கு ஹிந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். இதற்கு பதில் அளிக்க அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அவகாசம் வழங்கி விசாரணையை நீதிமன்றம்தள்ளி வைத்தது.