200 பேர் மீது வழக்குப் பதிவு

நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவை வெளியிட்டார் மகாராஷ்டிராவின் பிவாண்டி பகுதியை சேர்ந்த சாத் அன்சாரி என்ற முஸ்லிம் மாணவர். இதையடுத்து கடந்த ஜூன் 12 அன்று அவரது வீட்டுக்கு 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் மதவெறியர்கள் கும்பலாக சென்றனர். கோஷமிட்டனர். அன்சாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். எதிர்ப்பாளர்களில் ஒருவர் சாத் அன்சாரி மீது தாக்குதல் நடத்தினார். சாத் அன்சாரி மீது கொடுக்கப்பட்ட புகாரையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், காவல்துறையினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 205 பேர் மீது, சட்டவிரோதமாக கூடுதல், பொதுஅமைதியை கெடுத்தல், வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல அதே பகுதியை சேர்ந்த முகேஷ் பாபுராம் சவான் என்பவரின் வீட்டுக்கும் சென்ற ஒரு முஸ்லிம் கும்பல், அங்கும் போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.