சுவாமி சிலைகள் உடைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சுவாமி சிலைகளை உடைப்பது, கோயில் தேர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டம்  வேப்பூர் வட்டம் எழூமூர் கிராமத்தில் நூறு வருட பழமையான அய்யனார் கோயிலில் சுவாமி சிலைகள் தேசப்படுத்தப்பட்டது. பிறகு வேப்பந்தட்டை வட்டம் வ.களத்தூரில் கோயில் தேரை எரிக்கும் முயற்சி நடந்தது. தற்போது பெரம்பலூர் வட்டம் சிறுவாச்சூரில் சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.