புத்தக வெளியீடு

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத இணைப் பொதுச்செயலாளர் சி.ஆர். முகுந்த், கடந்த திங்கட்கிழமை அருணாச்சல பிரதேசம், இடாநகரில் உள்ள சேவா தாம் அரங்கில் நடைபெற்ற அறிவார்ந்த சமூகத்தினருடனான ஒரு சந்திப்பில், ‘நார்த் ஈஸ்ட் கிரோனிக்கல்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகம் பாரதத்தின் சுதந்திர போராட்டத்தில் வடகிழக்குப் பகுதியின் பங்களிப்பு, அதன் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பேசுகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘தேசத்தின் பிற பகுதிகளில் உள்ளவர்களைப் போலவே, இப்பகுதி மக்களும் பாரதத்தின் சுதந்திர போராட்டத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். அருணாச்சல பிரதேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அளித்த பங்களிப்பை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்றார். மேலும், சங்கத்தின் துவக்கக் காலத்தில் இருந்து ‘குணாதிசயத்தை மேம்படுத்துவதன் மூலம், தேசத்தையும் மனிதனை உருவாக்குதல்’ ஆகியவற்றில் சங்கத்தின் பெரும் பங்களிப்பு குறித்தும் இந்த சந்திப்பின் போது எடுத்துரைக்கப்பட்டது.