பா.ஜ.க தட்டிக்கேட்கும்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தி.மு.க ஆட்சியில், தமிழரின் மாண்பையும் தமிழரின் மரபையும் தமிழரின் தொன்மையையும் இறை நம்பிக்கையையும், இழிவுபடுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத் தாய்மார்களை, தமிழினத்தை அவமதிக்கும் கருத்திற்கு. கோவை மாவட்டத்தில் ஜனநாயக ரீதியாக, எதிர்ப்பு தெரிவித்த, பா.ஜ.க தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 26ம் தேதி, அறவழியில், சிறை நிறப்பும் போராட்டம் நடத்தப்படும். தமிழக காவல்துறை, தி.மு.கவின் ஏவல் துறையாக செயல்படுகிறது. தமிழ் இனத்தை, தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தி கேவலப்படுத்தும். ஆ. ராசா போன்ற ஆளும் கட்சி நபர்களை எல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை, ஜனநாயக ரீதியாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பா.ஜ.க தொண்டர்களையும் நிர்வாகிகளையும் பொய் வழக்கில் கைது செய்து அச்சுறுத்துகிறது. சில தி.மு.க வழக்கறிஞர்கள் நீதிபதிகளையே அச்சுறுத்தி வருகிறார்கள். தி.மு.கவின் அராஜகமும் ஆளும் கட்சி என்பதால் நடத்தும் அத்துமீறலும், கண்டிக்கத்தக்கது. தி.மு.கவின் பொய் வழக்கைக் கண்டும், கைது நடவடிக்கையைக் கண்டும் எந்த பா.ஜ.க தொண்டனும் அஞ்சப்போவதில்லை.. தவறை யார் செய்தாலும் தட்டிக்கேட்க பா.ஜ.க தயங்காது. தமிழினத் தாய்மார்களை தரம் தாழ்ந்து பேசிய ஆ. ராசாவை கைது செய்யாமல், பாதிக்கப்பட்டவர்கள் மேல் பொய் வழக்கு போட்டு கைது செய்வது எந்த விதத்தில் நியாயம்? காலம் உங்களை கண்டிப்பாக தண்டிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று கூறியுள்ளார்.