பா.ஜ.க தொண்டரின் பைக் எரிப்பு

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தின் பெரலசேரி கீழராவில் வசிக்கும் பா.ஜ.க தொண்டர் கிரண் என்பவரின் இருசக்கர வாகனத்தை, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி குண்டர்கள் எரித்து தீக்கிரையாக்கினர். அவரது வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அந்த இருசக்கர வாகனத்தை சாலைக்கு எடுத்து சென்று அவர்கள் எரித்துள்ளனர். எடக்காடு காவல் நிலையத்தில், இது குறித்து பா.ஜ.க புகார் அளித்துள்ளது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.