பா.ஜ.க தொண்டர் படுகொலை

மேற்கு வங்க மாநிலம் பூர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள பாகபன்பூரில் பா.ஜ.க சக்தி கேந்திராவின் தலைவர் ஷம்பு மைதி வெட்டிக் கொல்லப்பட்டார். அப்பகுதி மக்கள் கூறுகையில், அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் மைதியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை ஆற்றங்கரையில் மைதியின் சடலம் கிடந்தது. இதைக் கண்டு காவல்துறையில் புகார் அளித்தனர். மைதியின் உடல் முழுவதும் வெட்டுக் காயங்கள் இருந்தன. வழக்கம்போல திருணமூல் காங்கிரஸ் கட்சி இதனை தாங்கள் செய்யவில்லை என மறுத்து உள்ளது. இதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 17ல், உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இதாஹார் பகுதியில் பா.ஜ.கவின் இளைஞர் பிரிவின் மாவட்டத் துணைத் தலைவர் மிதுன் கோஷ், அவரது வீட்டில் சில அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.