தமிழகத்தை பா.ஜ.க ஆளும்

தி.மு.கவின் மூத்த தலைவரான மறைந்த க. அன்பழகனின் பேரன் அன்புகிரி, இணையதள ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘பா.ஜ.கவில் நான் இணந்ததற்கு காரணம், நான் ஒரு தேசியவாதி, ஆன்மீகவாதி. தி.மு.கவில் உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. ஆனால், பா.ஜ.கவில் எனக்கு உரிய மரியாதை கிடைக்கிறது. உழைப்புக்கு ஏற்ற இடமாக பா.ஜ.க உள்ளது. அங்கு உழைப்புக்கு ஏற்ற மரியாதை கிடைக்கிறது. படித்த இளைஞர்கள் பா.ஜ.க’வை தற்பொழுது நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். பலர் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருகிறது. ஈ.வே.ரா மண்ணில் பா.ஜ.க வெல்லும், காவி கொடி பறக்கும். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மனித நேயமிக்கவர். மோடியின் திட்டமான எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதுதான் தலைமை முதல் அடிமட்டத் தொண்டன் வரை உள்ள அனைவரின் எண்ணம்’ என கூறினார்.