பா.ஜ.க தலைவர் கொலை

தெலுங்கானாவில், நேற்று காலை மேடக் மாவட்ட காவல்துறையினருக்கு ஒரு கார் எரிந்த நிலையில் இருப்பதாகவும் அதில் ஒரு உடல் கிடப்பதாகவும் தகவல் வந்தது. காவல்துறை விசாரணையில், அதில் இறந்தவர் தெலுங்கானாவின் மேடக் பகுதியை சேர்ந்த பா.ஜ.கவின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் வி.ஸ்ரீனிவாஸ் பிரசாத் என்பது தெரியவந்தது. அவரை அவரது காரின் டிரங்க்கில் அடைத்து வைத்து சில மர்ம நபர்கள் உயிரோடு எரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேடக் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தனா தீப்தி, இந்த வழக்கு குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.