பா.ஜ.க ஆர்பாட்டம்

முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு தண்ணீர் திறந்து விட்டதையும், அணையின் உரிமை தமிழகத்தின் கைகளி இருந்தும் அதனை தட்டிக் கேட்காமல் வாய்மூடி மௌனமாக இருக்கும் தி.மு.க அரசை கண்டித்தும், 142 அடி தண்ணீர் தேக்கிவைக்கும் உரிமையை விட்டுக்கொடுத்துவிட்ட முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும் பா.ஜ.க சார்பில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் ஆர்பாட்டம் நடத்தினர். இதில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பா.ஜ.கவினர் மழையையும் பொருட்படுத்தாது கலந்துகொண்டனர்.