களமிறங்கிய பா.ஜ.க கவுன்சிலர்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க குழி தோண்டும் பணிகள் பல இடங்களில் நடந்து வருகிறது. மார்த்தாண்டம் 16வது வார்டு பகுதியில் குழிதோண்டும் போது சில வீடுகளின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டது. தொடர் விடுமுறை காலத்தில் பழுதை சீரமைக்காததால் குடிநீர் இன்றி  பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர். வார்டு பா.ஜ.க கவுன்சிலரான ரெத்தினமணி, ஒப்பந்தகாரர் மற்றும், குடிநீர் வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து ரெத்தினமணி தானே பிளம்பர் உதவியுடன் மண் வெட்டியுடன் களத்தில் இறங்கி பழுதடைந்த உடைப்பை சரி செய்தார். பின்னர் ஒப்பந்ததாரர்கள் ஏற்படுத்திய சேதத்தை சரி செய்து குழிகளை மூடியுள்ளார். இதை அப்பகுதி மக்கள் பாராட்டியதோடு அதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.