பா.ஜ.கவில் இணைந்தவர்கள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நேற்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தனர். இதுகுறித்து கருத்து பதிவிட்ட அண்ணாமலை, ‘திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பட்டியலினத்துச் சகோதர சகோதரிகள், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை ஏற்று, பா.ஜ.கவில் தங்களை இணைத்துக் கொள்ளும் விழா கொண்டாட்டமாக நடைபெற்றது. தாமரையைத் தாங்கும் தண்டுகளாக உழைப்பதற்கு, புத்துணர்வுடன் வந்திருக்கும் புதிய சொந்தங்களை, தமிழக பா.ஜ.க சார்பாக வாஞ்சையுடன் வரவேற்கிறோம்’ என தெரிவித்துள்ளார். மேலும், ‘சூப்பர் ஸ்டாரின் ரசிகரான தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்ற மாவட்டச் செயலாளரான இரா ரஜினி கணேசன் தலைமையில் ஓய்வு அறியாது நாட்டுக்கு உழைக்கும் பாரத பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தச் தஞ்சை மாநகரில் பா.ஜ.கவில் இன்று தங்களை இணைத்துக்கொண்டனர். ஆன்மிக அரசியலில் பற்றுக் கொண்டு தேசியத்தை வலுப்படுத்த இணைய வந்தார்களை தமிழக பா.ஜ.க சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.