பா.ஜ.க. நிர்வாகி கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தின் அலிகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா யாதவ். பா.ஜ.க.வின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சாவில் பொதுச்செயலாளராக உள்ளார். நேற்று முன் தினம், இவரை சில மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இவரது வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு புகார் அளித்தனர். காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, கிருஷ்ணா யாதவ், மண்டையில் குண்டு துளைக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். அவரது அருகில் ஒரு கைத்துப்பாக்கியும், காலியான துப்பாக்கி குண்டும் இருந்தது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது. ஆகவே, கிருஷ்ணா யாதவ் தேர்தல் முன்விரோதத்தால் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.