பள்ளியில் பைபிள் கட்டாயம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கிளாரன்ஸ் பள்ளி நிர்வாகம், அப்பள்ளியில், பயிலும் மாணவ, மாணவியர் அனைவரும் பள்ளிக்கு கட்டாயம், கிறிஸ்தவர்களின் புனித நுாலான பைபிள் எடுத்துவர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுபோல், பைபிள் அல்லது கிறிஸ்தவ துதி பாடல் தொகுப்பை எடுத்துவர எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என பெற்றோரிடம் ஏற்கனவே உறுதி மொழியை பெற்றுள்ளது இப்பள்ளி நிர்வாகம். இந்த விபரம் சமீபத்தில் வெளியானதையடுத்து, பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஹிந்து அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.