லவ் ஜிஹாத் மையமாகும் பரேலி

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியின் பித்ரி செயின்பூர் பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி கடத்தப்பட்டு நான்கு முஸ்லிம் நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்கார குற்றவாளிகளில் ஷாருக் மற்றும் ஓவைஸ் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உ.பி காவல்துறை தெரிவித்துள்ளது. சிறுமியின் தந்தை இதுகுறித்து காவல்துறையில் அளித்த புகாரில், தனது மகளுக்கு பள்ளி அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து முஸ்லிம் நபர்கள் கடத்தியதாகவும் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் சனிக்கிழமை காலை சஹ்தானா கிராசிங்கில் சிறுமியை விட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பகுதியில் செல்வாக்கு மிக்க குண்டர்களைக்கொண்டு அந்த குற்றவாளிகள் வழக்கை தீர்த்து வைக்க அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பணம் தருவதாக ஆசை காட்டுகின்றனர். மீறினால் கிராமத்தை விட்டு விரட்டி விடுவதாக மிரட்டுகின்றனர். இதனால் எங்கள் குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். காவல்துறையினர் முதலில் புகாரை ஏற்க மறுத்தனர். இதையறிந்த ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் மற்றும் கோரக்ஷா தளம் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையதையடுத்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் இருவரை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது. பரேலி பகுதியில் இதுபோன்ற வழக்குகள் மாதம் சுமார் 7 வழக்குகள் என்ற விகிதத்தில் பதிவாகி வருவதால் இது தற்போது முஸ்லிம்களின் லவ் ஜிஹாத் மையமாக மாறியிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.