பஜ்ரங்தள் உறுப்பினர் கொலை

கர்நாடகத்தில் நடந்து வரும் ஹிஜாப்  பிரச்சனைக்கு இடையே, அங்குள்ள சிவமோகா மாவட்டத்தில் ஹர்ஷா என்ற 26 வயது ஹிந்து ஆர்வலர், ஞாயிற்றுக்கிழமை இரவில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  பலியான ஹர்ஷா சிவமோகா மாவட்டத்தில் உள்ள சீகேஹட்டியைச் சேர்ந்தவர். இவர் பஜ்ரங்தளில் உறுப்பினராக உள்ளார். தையல்காரரான இவர், அனைவரும் சீருடை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி காவித்துண்டு அணிந்து புகைப்படம் எடுத்துள்ளார். அவரை கொன்ற குற்றவாளிகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. கொலையாளிகள் காரில் வந்து ஹர்ஷாவை கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். ஹர்ஷா கொலையைத் தொடர்ந்து சிவமொக்காவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த வழக்கில் காவல்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அவர் கொல்லப்படுவதற்கு முன் அவருக்கு மிரட்டல் வந்தது தெரிய வந்துள்ளது.