அய்யாக்கண்ணு பொறுப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சேவியர் என்பவர், தனக்கு 1.5 ஏக்கர் நிலத்தை சபரிநாதன் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார். சேவியர் இறந்துவிட்ட சூழலில், அவரது வாரிசுதாரரான ரெனிடா, அந்த நிலத்தை கேட்டதற்கு சபரிநாதன் கொடுக்க மறுத்து மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த நபருக்கு ஆதரவாக விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு ரெனிடாவின் குடும்பத்தை மிரட்டுவதாக அப்பெண் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம். எங்களது தற்கொலைக்கு விவசாய தலைவர் அய்யாக்கண்ணுவும், அரசு அதிகாரி சபரி நாதனும்தான் காரணம் என தெரிவித்துள்ளார்.