கோயிலில் திருட்டு முயற்சி

கோவில்பட்டியில் பூமிதேவி நீலாதேவி சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் நள்ளிரவு ஒரு மணிக்கு பாதுகாப்பு அலாரம் ஒலித்தது. இதனால் கோவிலின் இரவுக் காவலர்கள், பொதுமக்கள் கோவில் முன் திரண்டனர். உடனடியாக கோவில் நடையை திறந்து சென்று பார்த்தனர். அப்போது மூலவர் சன்னதியின் இரண்டு கதவுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டதும் பின்புற பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு மேல் கயிறு, கடப்பாரை, ஸ்க்ரூ டிரைவர் ஆகியவை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மர்ம நபர்கள் அவ்வழியாக உள்ளே வந்திருக்கலாம், அலாரம் ஒலித்ததால் அதே வழியாக தப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.