பட்டியலினத்தவர் மீது தாக்குதல்

ராஜஸ்தானில் உள்ள சுரு மாவட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த விவசாயியான ராகேஷ் மேக்வால் என்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கடந்த ஆண்டு ஹோலி பண்டிகையின் போது மேக்வாலுக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் மேக்வாலை ஜாதி ரீதியில் திட்டி அவமானப்படுத்தினர். சில நாட்களுக்கு முன், மேக்வாலைக் கடத்திச்சென்ற 8 பேர் கொண்ட கும்பல், அவரை கடுமையாகத் தாக்கி மதுவையும் சிறுநீரையும் குடிக்க வைத்தனர். இதுகுறித்து மேக்வால் அளித்த புகாரின் அடிப்படையில், உமேஷ், ராஜேஷ், தாராசந்த், ராகேஷ், பீர்பால், அக்‌ஷய், தினேஷ், பிடாதி சந்த் ஆகிய 8 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவானவர்களை தேடும் பணி முடிக்கிவிடப்பட்டு உள்ளது. 2018ல் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து அங்கு பட்டியலினத்தவர்கள், பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.