காஷ்மீர் ஹிந்துக்கள் மீது தாக்குதல்

ஸ்ரீநகரில் மருந்துகள் விற்பனை செய்து வந்த 70 வயது மக்கன் லால் பிந்ரு என்ற ஹிந்து பண்டிட் நேற்று முன்தினம் இரவு அவரது கடையிலேயே அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், பீஹார் பாகல்பூரில் இருந்து வந்த வீரேந்திர பாஸ்வான் எனும் இளைஞரையும், சாலையோரத்தில் தள்ளு வண்டியில் பாணிபூரி விற்பனை செய்து வந்தவரையும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். காஷ்மீரில் வாழும் ஹிந்துக்களை அச்சுறுத்தி முழுவதுமாக வெளியேற்றிட பாகிஸ்தான், உள்ளூர் அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகளின் தூண்டுதலுடன் இந்த ஜிஹாதி கும்பல் பயங்கரவாத வேலைகளை செய்துவருகிறது. 1990 களில் ஹிந்துக்களை படுகொலை செய்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருந்து பயங்கரவாதிகள் விரட்டியடித்தனர். அந்த மிரட்டல்களுக்கு அஞ்சிடாமல் ஸ்ரீநகரில் துணிச்சலுடன் மருந்தகம் நடத்தி வந்தவர் மக்கன் லால் என்பது குறிப்பிடத்தக்கது.