துணை சபாநாயகர் கார் மீது தாக்குதல்

ஹரியானா டெல்லி எல்லைப் பகுதியில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த துணை சபாநாயகர் ரன்பிர் கங்வாவின் கார் மீது, விவசாய போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், காரின் பின்பக்க கண்ணாடி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, துணை சபாநாயகர் காயங்களின்றி தப்பினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.