வீராங்கனைகள் பைக் பயணம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி எல்லையோர காவல் படையை (பி.எஸ்.எப்) சேர்ந்த 38 வீராங்கனைகள், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துடன் இணைந்து, காஷ்மீரிலிருந்து இருசக்கர வாகனப் பயணமாக 4,884 கி.மீ பயணித்து கன்யாகுமரி வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு குமரி ஜவான்ஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்ததற்காகவும், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் செய்தியை பரப்பியதற்காகவும் அனைத்து வீராங்கனைகளுக்கும் பி.எஸ்.எப் தலைமை இயக்குநர் பங்கஜ் குமார் சிங் வாழ்த்து தெரிவித்தார்.