முஸ்லிம் கௌரவக் கொலை

மும்பை மாநிலம் யவத்மால் பகுதிவில் வசிக்கும் பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் ஷேஷ்ராவ் ரத்தோட் என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இது முஸ்லிம் சமூகத்தில் சிலருக்குப் பிடிக்கவில்லை. கடந்த ஒரு மாதத்துக்கு முன், இதில், இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கிராமத்தின் பெரியவர்கள் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்தனர். இந்நிலையில், அந்த இளைஞரை அப்பெண்ணின் உறவினர்கள் ஆறு பேர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றனர்.  இதுசம்பந்தமாக, அளிக்கப்பட்ட புகாரையடுத்து அவர்களை காவல்துறை கைது செய்தது. எனினும் விசாரணை நத்தை வேகத்தில் நகர்கிறது, ஆறு குற்றவாளிகள் மீதும் விரைவான விசாரணை நடத்தி மரண தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி, பஞ்சாரா சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடந்த வெள்ளிக்கிழமை பல்வேறு ஊர்களில் இருந்து வந்து வசந்தராவ் நாயக் தோட்டத்தில் திரண்டனர். மாபெரும் பேரணியை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.