ஆப்கானிய சீக்கியர்கள் வருகை

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சீக்கியர்கள் 11 பேர் நேற்று காபூலில் இருந்து டெல்லிக்கு வந்தனர். காபூலில் குருத்வாரா தாக்குதலில் கொல்லப்பட்ட சவீந்தர் சிங்கின் அஸ்தியும் குழுவினர் எடுத்து வந்தனர். ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் அங்கு பெரும்பான்மையினராக உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளால் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களை பாதுகாப்பாக பாரதம் அழைத்துவரும் மத்திய அரசின் முயற்சிக்கு சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி மற்றும் இந்திய உலக மன்றம் ஆகியவை துணைபுரிகின்றன