அர்ஜுன் பீரங்கி வாங்க அரசு முடிவு

ஆவடி கன வாகன தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன அர்ஜுன் மார்க் 1 ஏ ரக பீரங்கி கவச வாகனங்களை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரியில் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இவற்றை பயன்படுத்த ராணுவ அமைச்சகமும் ஒப்புதல் அளித்தது.

இதனையடுத்து, 118 அர்ஜுன் மார்க் 1 ஏ ரக பீரங்கி கவச வாகனங்களை 7,523 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த பீரங்கி வாகனம், நவீன 120 மி.மீ துப்பாக்கி, எந்த காலத்திலும், எந்த தட்ப வெப்பத்திலும் தாக்குதல் நடத்தும் வடிவமைப்பு, இரவிலும் பார்க்கும் திறன், வேகமான தக்கும் திறன், நிலைத்தன்மை, துல்லியம், சமதளப் பரப்பில் மணிக்கு 70 கி.மீ வேகத்திலும் கடுமையான நிலப்பகுதியிலும் மணிக்கு, 40 கி.மீ வேகத்திலும் இயங்கும் திறன் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது.