தேசவிரோத இணையதளங்கள்

தேசத்தின் நலனுக்கு எதிராக  செயல்பட்ட யூடியூப் அலைவரிசைகளுக்கு எதிராக 2021 மற்றும் 2022ல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக ஊடக கணக்குகள், 747 இணையதளங்கள் ஆகியவற்றுக்கு எதிராக தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 69ஏ’வின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு தடைசெய்யப்பட்டன. தவறான செய்திகளை பரப்புவது மற்றும் இணையதளத்தில் அவற்றை பிரச்சாரம் செய்வதன் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் முகமைகளுக்கு எதிராக அரசு வலுவான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.