மற்றொரு மதவெறி கொலையா?

தேசத்தின் பல்வேறு இடங்களில் ஹிந்துக்கள் மீது கொலை வெறித்தாக்குதலை முஸ்லிம் அடிப்படைவாதிகள் நிகழ்த்தி வருகின்றனர். அவ்வகையில் நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் புகழ்பெற்ற சரல் வாஸ்து விரிவுரையாளர் சந்திரசேகர் அங்காடி என்ற சந்திரசேகர் குருஜி,  நேற்று வடக்கு கர்நாடகாவில் உள்ள ஹப்பலில் உள்ள தனியார் ஹோட்டலில் படுகொலை செய்யப்பட்டார். காவல்துறையினர் ‘ ஹோட்டலின் லாபிக்குள் நுழைந்த சந்திரசேகர் குருஜியை இரண்டு மர்ம நபர்கள், அவரைப் பின்பற்றுபவர்கள் என்று கூறி அருகில் சென்றனர், பின்னர் அவரை தாக்கி பலமுறை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொலை சம்பவம் ஹோட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனினும், கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்த தீவிர விசாரணை துவக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளனர். இதேபோல டெல்லியில் உள்ள கனாட் பிளேஸ் பகுதியில் ஒரு பெண்ணை மர்ம நபர் ஒருவர் தாக்கிவிட்டு தப்பித்து ஓடிவிட்டார். தாக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்திலும் வழக்கு  பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது.