மணல் கடத்தலை தடுத்த காவலர்களை கொல்ல முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பண்ணைவயல் ரோடு பகுதியில் பட்டுக்கோட்டை தாலுகா காவல்நிலைய காவலர்கள் சரவணன் மற்றும் சதீஷ் ஆகியோர் வழக்கம்போல இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியாக வந்த டாடா டர்போ வாகனத்தை ஆய்வு செய்ய முயன்றபோது, வாகனத்தில் இருந்தவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக காவலர்களின் மீது வாகனத்தை மோதி விட்டு தப்பிச் சென்றனர். இதில், காவலர்கள் இருவரும் காயமடைந்தனர். பின்னர் அவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வாகனத்தின் உரிமையாளர் ராஜா என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஓட்டுநர் நிஷாந்தை தேடி வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பெருகிவிட்ட தொடரும் மணல் கடத்தல், கனிமவளக் கடத்தல், அதனை தடுக்க முற்படும் அதிகாரிகள் மீதான கொலை முயற்சிகள், தாக்குதல் சம்பவங்கள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.