எப்.சி.ஆர்.ஏ சட்டத் திருத்தங்கள்

வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெற்று நம் நாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில், கடந்த 2020ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திருத்தங்கள் மிக கடுமையாகவும், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் கூறி சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘வெளிநாட்டு நன்கொடைகள் நாட்டின் சமூக பொருளாதார கட்டமைப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். வெளிநாட்டு நன்கொடைகள் துஷ்பிரயோகம், தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட கடந்தகால அனுபவங்களின் காரணமாக, கடுமையான சட்டத் திருத்தங்கள் அவசியமாகிறது. பாரதத்தின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு மேலோங்க வேண்டும். ‘அசௌகரியம்’ என்ற தொண்டு நிறுவனங்களின் மனு, அரசியலமைப்பு சட்டத்தைசவாலுக்கு உட்படுத்த முடியாது. எனவே, இந்த திருத்தங்களை நீதிமன்றம் உறுதி செய்கிறது என்று உத்தரவிட்டனர்.