மாற்றுத் திறனாளி ஐயப்ப தரிசனம்

ஆந்திராவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சுரேஷ் என்பவர், ஒற்றைக் காலால் 105 நாட்களில் 250 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து, சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துள்ளார். “இது எனக்கு முதன் முறை அல்ல இரண்டாவது முறை நடைபயணமாக சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வந்துள்ளேன். ஐயப்பனின் பரிபூரண அருளால் எனது பயணம் சிறப்பானதாக அமைந்தது. உலகத்தில் நன்மையும், கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்கள் அனைவரும் விடுபட வேண்டும் என்று இந்த புனித யாத்திரையை மேற் கொண்டேன். என் தரிசனத்திற்கு உதவிய காவல் துறையினருக்கும் தேவஸ்தான ஊழியர்களுக்கும் எனது நன்றிகள்” என்று சுரேஷ் கூறிய வார்த்தைகள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.