விமானப்படை பயிற்சி

இந்திய விமானப்படை இம்மாத இறுதியில், இஸ்ரேல் விமானப்படையுடன் இணைந்து ‘நீலக் கொடி’ என்ற பெயரிலான போர் பயிற்சியில் பங்கேற்கிறது. நீலக் கொடி பயிற்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரதமும் இஸ்ரேலும் இணைந்து நடத்திவருகிறது. கடந்த நவம்பர் 2017ல் இஸ்ரேலின் உவ்தா விமானப்படை தளத்தில் இப்பயிற்சி நடைபெற்றது. கொரோனா காரணமாக தள்ளிப்போன பயிற்சி தற்போது நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, எகிப்து நாட்டின் விமானப்படையுடனும் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்கிறது.