ஏ.பி.வி.பி கொண்டாட்டம்

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) மாணவர் அமைப்பு, பாரதம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், ஆண்டு முழுவதும் அதனை தேசமெங்கும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேசத்தில் 1,28,335 இடங்களில் தேசியக்கொடிகள் ஏற்றப்படும். மேலும், ஆண்டு முழுவதும் இன்டர்ன்ஷிப், மூவர்ணக்கொடி அணிவகுப்பு, சமூக ஊடக பிரச்சாரங்கள், மக்களால் மறக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய குறும்படங்கள் தயாரிப்பு போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தேசம் முழுவதும் உள்ள இளைஞர்கள், இந்த ஆண்டு முழுவதும் சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவும், மறக்கப்பட்ட நமது சுதந்திர போராட்ட கதாநாயகர்களை நினைவுகூரவும் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என ஏ.பி.வி.பி தேசிய பொதுச் செயலாளர் நிதி திரிபாதி தெரிவித்தார்.