பதவி துஷ்பிரயோகம்

தெலுங்கானாவின் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான ஆர்.எஸ்.பிரவீன்குமார், சமீபத்தில் தெலுங்கானாவின் துலிகட்டாவில் உள்ள ஒரு பௌத்த ஆலயத்தில் நடைபெற்ற ‘ஸ்வேரோ புனித மாதம்’ விழாவில், “எனக்கு கௌரி, கணபதி அல்லது பிற ஹிந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லை. நான் அவர்களை வணங்க மாட்டேன்.” என்று சொல்ல வைத்து  அப்பாவி குழந்தைகளிடம் சத்தியப் பிரமாணம் வாங்கினார். இந்த வீடியோ அங்கு பரவி பரபரப்பானது. இவர் ஹிந்துக்களுக்கு எதிரியாக செயல்படுகிறார், SWAEROES என்ற இயக்கத்தைத் தொடங்கி அதில் அரசு பணத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்ற பல குற்றச்சாட்டுகள் இவர் மீது ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன. பா.ஜ.கவும் ஹிந்து அமைப்புகளும் இதனை எதிர்த்து போராடின. இதனால் அவரின் ஆதரவாளர்கள், அம்மாநில பா.ஜ.க தலைவர் பாண்டி சஞ்சய் குமாரை கற்கலால் தாக்கியதுடன் அவரது வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.