ஏ.பி.ஜி.பிகையெழுத்து இயக்கம்

நுகர்வோர் நலன் நாடும் தேசிய அமைப்பான ‘அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து’ அமைப்பு, ரயில்வே துறை, கொரோனாவுக்கு முன்பாக மக்களுக்கு அளித்துவந்த வசதிகளை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி கையெழுத்து இயக்கம் ஒன்றை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. அதில், பேசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கும் மகளிருக்கும் வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். நீண்ட ரயில் பயணத்தின்போது வழங்கப்படும் பிரேக் ஜர்னி, டெலஸ்கோப்பிக் டிஸ்டன்ஸ், சர்க்குலர் ஜர்னி போன்ற நடைமுறைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளன. மேலும், கொரோனா பாதிப்பு குறைந்து சகஜ சூழல் திரும்பி வரும் நிலையில், ரயில் சேவைகளை மீண்டும் இயக்கத் துவங்கிய ரயில்வே துறைக்கு ‘அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து’ அமைப்பு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.