காங்கிரஸ் அலுவலகத்தில் சாவர்க்கர் சிலை

அகில பாரதிய இந்து மகாசபா தேசியத் தலைவர் சுவாமி சக்ரபாணி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “அடுத்த பிப்ரவரி 26ம் தேதி, வீர சாவர்க்கரின் நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள 24 அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு வீர் சாவர்க்கரின் சிலையை நிறுவ இந்து மகாசபை முடிவு செய்துள்ளது. ஆங்கிலேயரான ஏ.ஓ ஹியூம் மற்றும் அதன் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரால் நிறுவப்பட்ட காங்கிரஸ் கட்சி, மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான வீர சாவர்க்கரை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி மனநலம் குன்றியவர். அவருக்கு ஆக்ராவில் மனநல சிகிச்சை தேவை. ஆங்கிலேயர்களின் விருப்பப்படி சுதந்திரப் போராட்ட வீரரை அவமதித்ததால் அது குற்றம். அவ்வகையில் பாரதத்தின் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரரை அவமானப்படுத்தி ராகுல் குற்றமிழைக்கிறார். இதற்காக ராகுலின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். அவரை கைது செய்து சிறையில் வைக்க வேண்டும். மேலும், அக்பர் சாலையின் பெயரை வீர சாவர்க்கர் சாலை என்று மாற்றி சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” என்று ஹிந்து மகாசபை வலியுறுத்துகிறது ” என தெரிவித்துள்ளார்.