மாஸ்டர் பிளான் போர்டல்

பிரதமர் நரேந்திர மோடி, ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக ‘பி.எம் கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளானை’ தொடங்கிவைத்தார். குஜராத்தில் அதன் வேகமான அமலாக்கத்தை உறுதி செய்வதற்காக, அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல், முதல்முறையாக, ‘பி.எம் கதி சக்தி குஜராத் ஒருங்கிணைந்த மாஸ்டர் பிளான் இணைய போர்ட்டலை’ தொடங்கிவைத்தார். காந்திநகரில் உள்ள கிப்ட் சிட்டியில் “ஆசாதி@75: PM கதி சக்தி குஜராத்” திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கில். இதனை அறிமுகப்படுத்திய அவர், “பாரதத்தில் இதனை செயல்படுத்திய முதல் மாநிலம் குஜராத் ஆகும். இந்த டிஜிட்டல் போர்ட்டல் வணிகத்தை எளிதாக்குதல், அனுமதி பெறுதல், உகந்த திட்டமிடல் எளிமை, திட்டங்களைக் கண்காணிப்பது, நிர்வாகத்தின் எளிமை மற்றும் அதன் குடிமக்களுக்கு எளிதாக வாழ்வதற்கு உதவும்” என்று கூறினார். டிஜிட்டல் மயமாக்க காரணமாக, இந்த போர்டல் விரைவான முடிவெடுக்கும் செயல்பாட்டில் துணைபுரியும். திட்ட அனுமதிகளை விரைவுபடுத்துதல், கண்காணிப்பு, செயல்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் இதனால், பல்வேறு திட்டங்களுக்கான செலவு மற்றும் நேரம் குறையும். இது முழு மாநிலத்திற்கும் ஒரு மாற்றமாக இருக்கும் மற்றும் பல்வேறு அரசு துறைகளின் செயல்திறனை மேம்படுத்தும். வரவிருக்கும் உள்கட்டமைப்பு திட்டங்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.