பாதிரி கைது

கோவை மலுமச்சம்பட்டியில் வசிக்கும், பொம்மை வியாபாரம் செய்யும் ஒரு தம்பதியினருக்கு, இரு மகள்கள் உண்டு. அதில் ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் இருவரும் பொம்மை வியாபாரத்திற்காக வெளியூர் செல்ல, மாணவிகள் அவர்களின் பாட்டி வீட்டில் வசித்தனர். அவர்களது பாட்டி வெளியில் சென்ற சமயத்தில், 53 வயதுடைய ஸ்டீபன்ராஜ் என்ற கிறிஸ்தவ பாதிரி வீட்டிற்குள் அந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அந்த மாணவி சத்தமிட்டு அலறியுள்ளார். உடனே சம்பவ இடத்திலிருந்து பாதிரி தப்பி ஓடினார். பின்னர் மாணவியின் பாட்டி அப்பகுதி மக்கள் உதவியுடன் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இற்ற்ஹையடுத்து கவல்துறையினர், பாதிரி ஸ்டீபன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.