1.25 லட்சம் அக்னி வீரர்கள்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களின் ஆட்சேர்ப்பு எதிர்காலத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த முன்னோடியான திட்டத்தை ‘பகுப்பாய்வு’ செய்வதற்காக தற்போது முதல்கட்டமாக 46,000 ராணுவ வீரர்கள் ஆட்சேர்ப்பு என்று சிறிய அளவில் தொடங்கப்படவுள்ளது. இது அடுத்த 5 ஆண்டுகளில், படிப்படியாக ஆண்டுக்கு 60,000 பேர் என்ர அளவில் உயரும்.  இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் 1.25 லட்சமாக உயரும் என அவர் கூறியுள்ளார்.