கடற்படையில் அக்னிபத் பெண்கள்

அக்னிபாத் திட்டத்தில் படைகளில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்க, இந்திய கடற்படை தற்போது ஒரு தனித்துவமான முடிவை எடுத்துள்ளது. அதன்படி, இந்திய கடற்படையின் முதன்மையான அடிப்படை பயிற்சி நிறுவனமான ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்கா,  ‘அக்னிபத்’ திட்டத்தை முன்னிட்டு அதன் ஆட்சேர்ப்பில், பெண்கள் ஆட்சேர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்க்கப்பல்களிலும் பெண் மாலுமிகள் பணியமர்த்தப்பட உள்ளனர். கடற்படையில் அக்னிவீரர்களின் முதல் தொகுதி பயிற்சி இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.