சம்ஸ்க்ருத பாரதி முகாம்

சம்ஸ்கிருத பாரதி அமைப்பின் வடதமிழக மாநில பயிற்சி முகாம் (பிராந்த ப்ரசிக்ஷண வர்க), ஜூன் 2 முதல் 12ம் தேதி வரை சேலத்தில் உள்ள வைசியா கல்லூரியில்  நடைபெற்றது. இம்முகாமில் 36 ஆண்கள், 60 பெண்கள் கலந்துகொண்டனர். இதில் சிறப்புரையாற்றிய மன்னார்குடி ஜீயர், ‘தமிழகம் சம்ஸ்கிருதம் நிறைந்த மாநிலமாக மாற ஒவ்வொருவரும் குறைந்தது 10 நபர்களுக்காவது சம்ஸ்கிருதம் கற்றுத்தர வேண்டும்’ என கூறினார். இந்த முகாமில், சம்ஸ்கிருத பாரதி அமைப்பின் பல்வேறு பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர், ‘கீதாம்ருத’ நிகழ்ச்சியையொட்டி ‘கீதாங்கனம்’ கண்காட்சி அமைக்கப்பட்டது, ‘வைஜெயந்தி’ என்ற கீதை பாராயணம் நடைபெர்றது.