ஹிந்து என நினைத்து பழகினேன்

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பையாவின் குடும்பத்துடன் மலேசியாவில் வசிக்கின்றனர். சுப்பையாவின் மகள் கவிதா, தன்னை நெல்லை டவுன் சிக்கர்தர் தெருவைச் சேர்ந்த இம்ரான் என்பவர் காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ‘இம்ரான் மலேசியாவில் வேலை பார்த்தார். எனது தோழி திருமணத்தில் அறிமுகமானார். முகநூல் மூலம் என்னிடம் பழகினார். நாளடைவில் இது காதலாக மாறியது. இம்ரான் தான் ஒரு ஹிந்து என்றும் பெயர் அருண்குமார் எனவும் கூறினார். ஆனால், பழகிய பிறகுதான் அவர் ஒரு முஸ்லிம் என தெரியவந்தது. இதுகுறித்து கேட்டபோது ஹிந்துவாக மதம் மாறி திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். பின்னர் தனது பெயரை தருண் என மாற்றி ஹிந்து மத்ததிற்கு மாறியதாகவும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். அதை நம்பி ஸ்ரீவைகுண்டம் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். பிறகுதான் அவர் மதம் மாறியதாக பொய் சொன்னது தெரியவந்தது. நான் ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளேன். பணத்திற்காகவே ஏமாற்றி திருமணம் செய்து கொண்டேன் என்று கூறி என்னை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். அவரது சகோதரியும் தாயாரும் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இம்ரானுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சிக்கின்றனர். என்னிடம் 14 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். என்னைப் போன்றே பல பெண்கள் அவரிடம் ஏமாந்துள்ளனர். எனவே இம்ரானை உடனடியாக கைது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். காவல்துறை இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், கவிதா நீதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.