மாரிதாஸ் வழக்கு

முப்படைகளின்  தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு எதிரான கருத்தை பதிவிட்டதாகக் கூறி, தமிழக அரசு மாரிதாஸ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. வழக்கை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.